crossorigin="anonymous">
உள்நாடுபொது

மின்சாரத் துண்டிப்பு  இறுதித் தீர்மானம் இன்று

இலங்கை மின்சார சபையின் கையிருப்பில் உள்ள எரிபொருளின் அளவை அடிப்படையாகக் கொண்டு இன்று (24) இடம்பெறவுள்ள பேச்சுவார்த்தையின்போது தீர்மானம் எடுக்கப்படும் என அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

போதியளவிலான எரிபொருள் இல்லாமையினால் சபுகஸ்கந்த மின்நிலையத்தின் செயற்பாடுகள் முற்றாகத் தடைப்பட்டன. இதன் மூலம் தேசிய மின்சாரக் கட்டமைப்பு 108 மெகாவொட் மின்சாரத்தை இழந்ததாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

‘யுகதனவி’ மின் நிலையத்தில் உள்ள எரிபொருள் எதிர்வரும் 10 நாட்களுக்கு மாத்திரம் போதுமானதாகும். தேசிய மின்சாரக் கட்டமைப்பிற்குக் கிடைக்க வேண்டிய 183 மெகாவொட் மின்சாரம் கிடைக்காமையினால் மின்சார துண்டிப்பை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. மின்சாரத் துண்டிப்பு தொடர்பாக இன்று இடம்பெறவிருக்கும் அமைச்சரவைக் கூட்டத்தின்போது கவனம் செலுத்தப்படும் என்று அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்தார்.

 

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 50 = 55

Back to top button
error: