crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

யாழ். மாவட்டச் செயலக நலன்புரி சங்க இரத்ததான முகாம்

யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில், மாவட்டச் செயலக நலன்புரி சங்கத்தினால் வருடாந்தம் நடாத்தப்படும் “உதிரம் கொடுப்போம் உயிர்களை காப்போம்” எனும் தொனிப்பொருளிலான இரத்ததான முகாம் யாழ். போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கிபிரிவின் பங்குபற்றுதலுடனும் இன்றைய தினம் (10) மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இவ் இரத்ததான நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன், வைத்திய கலாநிதி பவித்ரா, பொது சுகாதார பரிசோதகர் த.ரவினதாஸ் மற்றும் மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் தாதிய உத்தியோகத்தர்கள் ஆகியோரும் பங்குபற்றியிருந்தார்கள்.

நிகழ்வானது நலன்புரி சங்க தலைவரும் கணக்காளருமான ஏ.நிர்மல் அவர்களின் தலைமையில் இரத்ததான நிகழ்வில் முப்பத்துநான்கு உத்தியோகத்தர்கள் குருதிக் கொடை வழங்கியமையும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 57 − 50 =

Back to top button
error: