crossorigin="anonymous">
உள்நாடுபொது

சட்ட மா அதிபருக்கான ஒருங்கிணைப்பு அதிகாரி பதவி இரத்து

உடனடியாக அமுலாகும் வகையில் சட்ட மா அதிபருக்கான ஒருங்கிணைப்பு அதிகாரி பதவியை இரத்துச் செய்வதற்கு புதிதாக நியமிக்கப்பட்ட சட்ட மா அதிபர் சஞ்சய் ராஜரட்ணம் நடவடிக்கை எடுத்துள்ளார்

இறுதியாக பதவி வகித்த சட்ட மாஅதிபர் தப்புல டி லிவேராவின் ஒருங்கிணைப்பு அதிகாரியாக நிஷாரா ஜயரத்ன செயற்பட்டார் என்பதுடன் தப்புல டி லிவேரா ஓய்வு பெற்றவுடன், நிஷாரா ஜயரத்ன, 2021 மே 24 ஆம் திகதியன்று தனது கடமைகளிலிருந்து விலகிக்கொண்டார்.

இனிமேல் இதன்படி சட்ட மா அதிபருக்கான ஒருங்கிணைப்பு அதிகாரி என்று எவரும் செயற்படமாடடார்கள் என்பதுடன் இந்தப் பதவி நிலை இரத்து செய்யப்படுதல் உடனடியாக நடைமுறைக்கு வருகிறது.

சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் செத்திய குணசேகர வெளியிட்டுள்ள சுற்றிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 20 = 21

Back to top button
error: