crossorigin="anonymous">
உள்நாடுபொது

சகல அரச ஊழியர்களும் நாளை முதல் வழமை போன்று சேவைக்கு

இலங்கையில் சகல அரச ஊழியர்களையும் நாளையில் (03) இருந்து வழமை போன்று சேவைக்கு அழைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இது தொர்பான சுற்றுநிருபம் அரசசேவை, மாகாணசபை மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சு வெளியிட்டுள்ளது.

கொவிட் பெருந்தொற்றுக் காரணமாக நிறுவகப் பிரதானிகளின் அங்கீகாரத்திற்கு அமைவாக இதுவரை அரச சேவையாளர்கள் பணிக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

நாளை முதல் வழமையான முறையில் பணி இடம்பெறுவதனால் சகல திணைக்களங்களிலும் சுகாதார வழிமுறைகளை முறையாக கடைப்பிடிப்பது அவசியமாகும்.

தேவையின் அடிப்படையில் ஊழியர்களை பணிக்கு அழைப்பதற்காக நிறுவக பிரதானிக்கு அதிகாரம் வழங்கும் நடைமுறை புத்தாண்டு தொடக்கம் இரத்து செய்யப்படுவதாக அரச சேவை, மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சு தெரிவித்துள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 60 = 66

Back to top button
error: