crossorigin="anonymous">
உள்நாடுபொது

வைத்தியர் ஷாபி சிஹாப்தீன் சம்பள நிலுவையுடன் மீண்டும் பணியில்

கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்ட குருணாகல் போதனா வைத்தியசாலை வைத்தியர் ஷாபி சிஹாப்தீன் பணியில் மீள இணைக்கப்பட்டுள்ளார்.

சட்டவிரோத கருத்தடை அறுவை சிகிச்சை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு வைத்தியர் ஷாபி சிஹாப்தீன் கடந்த 2019, மே 24ஆம் திகதி முதல் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டதிலிருந்ததுடன் தற்போது அவருக்கான சம்பளத்தை வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் மாறு சுகாதார அமைச்சின் செயலாளர் எஸ்.எச். மூனசிங்க அறிவித்துள்ளார்.

குருணாகல் போதனா வைத்தியசாலை பணிப்பாளருக்கு எழுதியுள்ள கடிதத்திலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கட்டாய விடுமுறையில் அனுப்பப்படும் அதிகாரி ஒருவர் தொடர்பில் செயற்பட வேண்டிய விதம் தொடர்பில், தாபன விதிக்கோவையில் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கும் நிலையில், குறிப்பிட்ட காலப் பகுதிக்கான சம்பளத்தை வழங்காமை தொடர்பான காரணத்தை, தாமதிக்காமல் தனக்கு அறிவிக்குமாறு, சுகாதார அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 32 − = 23

Back to top button
error: