crossorigin="anonymous">
உள்நாடுபொது

இலங்கையில் சுகாதார வழிகாட்டி மேலும் 15 தினங்களுக்கு நீடிப்பு

கொவிட் தொற்றுக் காரணமாக நடைமுறைப்படுத்தியிருக்கும் சுகாதார வழிமுறைகள் மேலும் 15 தினங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

அமுலில் உள்ள சுகாதார வழிமுறைகளில் மாற்றம் மேற்கொள்ளாது, டிசம்பர் மாத இறுதி வரை தொடர்வதற்கு தீர்மானித்திருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்த்தன (15) தெரிவித்துள்ளார்.

நடைபெற்ற செய்தியாளர்களுடனான சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டார்.

தற்போது நடைமுறையில் உள்ள வழிகாட்டி ஆலோசனைகளில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தாது நீடிக்க நாம் எதிர்ப்பார்த்துள்ளோம் புதிதாக வரையறைகளை மேற்கொள்ள நாம் எதிர்பார்க்கவில்லை என்றும் அவர் கூறினார்.

பொது மக்களிடம் இது தொடர்பில் வேண்டுகோளோன்றை முன்வைக்கின்றோம். தற்போது 20 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசி வழங்க தீர்மானித்துள்ளோம். இதனால் அருகில் உள்ள வைத்தியசாலை அல்லது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் நடத்தப்படும் தடுப்பூசி ஏற்றப்படும் மத்திய நிலையங்களில் தடுப்பூசியை கூடிய விரைவில் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 40 + = 41

Back to top button
error: