crossorigin="anonymous">
உள்நாடுபொது

நத்தார் பண்டிகை தினங்களில் மதுபான விற்பனை தடை வேண்டும் – கர்தினால் மல்கம் ரஞ்சித்

நத்தார் பண்டிகை தினங்களில் மதுபான விற்பனை தடை செய்ய வேண்டும் என பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்

வெசாக் உற்சவத்தின் போது மதுபான விற்பனை தடைசெய்யப்படுமானால் நத்தார் பண்டிகையிலும் அதனை தடைசெய்ய வேண்டும் என பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

மதம் என்பது விருந்துகளை ஏற்படுத்துவது மற்றும் மதுபானம் அருந்தி உயிர்களை அழிக்கவல்ல என தெரிவித்துள்ள பேராயர், மதம் என்பது மிக உன்னதமானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கனேமுல்ல பகுதியில் நடைபெற்ற மத வழிபாட்டு நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 47 − = 44

Back to top button
error: