crossorigin="anonymous">
உள்நாடுபொது

ஊடகவியலாளர்களுக்கான சுகாதார ஊடக மன்றத்தை நிறுவ நடவடிக்கை

இலங்கை பத்திரிகை ஸ்தாபனம்(SLPI), உலக சுகாதார ஸ்தானத்துடன் (WHO) இணைந்து சுகாதார அறிக்கையிடலில் ஆர்வமுள்ள ஊடகவியலாளர்களுக்கான சுகாதார ஊடக மன்றத்தை (Health Journalism Forum) நிறுவுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது

இம்முயற்சியின் முதல் படியாக, இலங்கை மருத்துவ சங்கத்தின் (SLMA) தலைவர் வைத்தியர். பத்மா குணரத்ன மற்றும் சண்டே டைம்ஸ் பத்திரிகையின் துணை ஆசிரியரும் (விவரணக்கட்டுரை), சிரேஷ்ட ஊடகவியலாளருமான குமுதினி ஹெட்டியாராச்சி ஆகியோருடன் இணையவழி கலந்துரையாடலொன்றை ஏற்பாடு செய்துள்ளது.

எதிர்வரும் மாதங்களில் தொடர்ந்து நடைபெறவிருக்கும் மன்றத் தொடரில் முதன்மையானதும் ஆரம்ப அமர்வுமான இந்த கலந்துரையாடல் இன்று (30) செவ்வாய்கிழமை மாலை 7 மணிக்கு இணையவெளியில் நடைபெறவிருக்கிறது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 32 = 36

Back to top button
error: