crossorigin="anonymous">
உள்நாடுபொது

சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று முதல் 48 மணி நேர பணிப் பகிஷ்கரிப்பு

நாடு முழுவதும் வைத்திய சேவை தவிர்ந்த, தாதியர் உள்ளிட்ட 15 சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று (24) முதல் 48 மணி நேர பணிப் பகிஷ்கரிப்பை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக அரச தாதியர் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னபிரிய தெரிவித்தார்

இன்று காலை 07 மணி முதல் எதிர்வரும் இரண்டு தினங்களுக்கு இந்த பணிப் பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படும் எனவும் அரச தாதியர் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னபிரிய தெரிவிக்கின்றார்.

நாடு முழுவதும் உள்ள அனைத்து வைத்திய கட்டமைப்பு மற்றும் பொது சுகாதார சேவை ஆகியவற்றின் அதிகாரிகள் இந்த பணிப் பகிஷ்கரிப்பில் இணைந்துக் கொள்ளவுள்ளதாக அவர் கூறுகின்றார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 27 − = 20

Back to top button
error: