crossorigin="anonymous">
உள்நாடுபொது

புனரமைக்கப்பட்ட மட்டக்களப்பு காந்தி பூங்கா மாநகர சபையிடம் கையளிப்பு

மட்டக்களப்பு காந்தி பூங்கா புனரமைக்கப்பட்டு மாநகர சபையிடம் கையளிக்கும் நிகழ்வு நேற்று (20) இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு விமானப்படையின் குறுப் கப்டன் நிலந்த பியசேன தலைமையில் இடம்பெற்ற நிகழ்விற்கு பிரதம அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் கலந்து சிறப்பித்திருந்தார்.

சேவா வனிதா நிதி உதவியால் இலங்கை விமானப் படையினரால் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்ட காந்தி பூங்காவானது மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவனிடம் நேற்று (20) உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளது.

இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளர் மா.தயாபரன் உள்ளிட்ட விமானப்படையின் உயரதிகாரிகள், விமானப்படை வீரர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 5 + = 8

Back to top button
error: