crossorigin="anonymous">
உள்நாடுபொது

மறைந்த பிரதமர் தி.மு.ஜயரத்னவின் நினைவு தின நிகழ்வில் ஜனாதிபதி பங்கேற்பு

இலங்கையின் மறைந்த பிரதமர் தி.மு.ஜயரத்ன அவர்களின் இரண்டாவது ஆண்டு நினைவு தின நிகழ்வு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் இன்று (20) கம்பளை – அம்புலுவாவ உயிரியல் பன்முக கட்டிடத்தில் இடம்பெற்றது.

நினைவு நாள் நிகழ்வுக்கு வருகை தந்த ஜனாதிபதி அவர்கள், அம்புலுவாவ விஹாரையை தரிசித்ததுடன், உயிரியல் பன்முக கட்டிடத் தொகுதியையும் பார்வையிட்டார். அதன்பின்னர் தி.மு.ஜயரத்ன அவர்களின் உருவச் சிலையை திறந்து வைத்து, மலர் அஞ்சலியும் செலுத்தினார்.

கிராம சபையில் இருந்து அரசியலை ஆரம்பித்த தி.மு.ஜயரத்ன அவர்கள், “இலங்கை சுதந்திரக் கட்சியின்” 13ஆவது உறுப்பினர் ஆவார். 1970களில் முதல் தடவையாகப் பாராளுமன்றத்துக்கு பிரவேசித்த அவர், 1994இல் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக நியமிக்கப்பட்டார். 2010ஆம் ஆண்டு வரை பல்வேறு அமைச்சுப் பொறுப்புகளை வகித்த தி.மு.ஜயரத்ன அவர்கள், 2010 முதல் 2015 வரை இந்நாட்டின் 14ஆவது பிரதமராகவும் செயற்பட்டார். 2019 நவம்பர் மாதம் 19ஆம் திகதி அவர் இறைவனடி சேர்ந்தார்.

இராஜாங்க அமைச்சர் அநுராத ஜயரத்னவினால் நினைவு தினத்தையொட்டி, ஜனாதிபதி அவர்களுக்கு நினைவுப் பரிசு ஒன்றும் கையளிக்கப்பட்டது. அம்புலுவாவ உயிரியல் பன்முக வளாகத்தில் வெள்ளைச் சந்தன மரக்கன்று ஒன்றும் ஜனாதிபதி அவர்களினால் நடப்பட்டது.

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை தொடரும் செல்வி ஷலனி வாசல பண்டாரவினால் எழுதப்பட்ட “மனுஷத்வயே மேஹேயும” நூலும் ஜனாதிபதி அவர்களுக்கு கையளிக்கப்பட்டது.

இச்சந்தர்ப்பத்தில் மூன்று நிக்காயாக்களினதும் மஹா சங்கத்தினர், அமைச்சர் சமல் ராஜபக்ஷ, மஹிந்தானந்த அலுத்கமகே, ஆளுநர் லலித் யூ.கமகே, பாராளுமன்ற உறுப்பினர்களான குணதிலக ராஜபக்ஷ, உதயன கிரிந்திகொட, அம்புலுவாவ நிர்வாக சபையின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் இணைந்து கொண்டிருந்தனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 79 = 80

Back to top button
error: