crossorigin="anonymous">
உள்நாடுபொது

பயணக் கட்டுப்பாடு ஜூன் 7 வரை தொடர்ந்து அமுல்படுத்தப்படும்

இலங்கையில் தற்போது நாடு முழுவதும் நடைமுறையிலுள்ள பயணக் கட்டுப்பாடு ஜூன் மாதம் 7 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை தொடர்ந்து அமுல்படுத்தப்படும் என்று கொவிட்19 வைரசு தொற்று பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் பிரதானியும் இராணுவத்தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

இதற்கமைவாக எதிர்வரும் 31 ஆம் திகதி திங்கட் கிழமை அதிகாலை 4.00 மணி தொடக்கம் இரவு 11 .00 மணிவரையும், ஜூன் மாதம் 4 ஆம் திகதி வெள்ளிக்கிழமையும் பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்பட மாட்டாது என்றும் இராணுவ தளபதி அறிவித்துள்ளார்..

இக்காலப்பகுதியில் அத்தியவசிய பொருட்களை வீடுகளுக்கே விநியோகிக்க மாவட்ட செயலாளர் அலுவலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்கள் ஊடாக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 85 − = 84

Back to top button
error: