crossorigin="anonymous">
உள்நாடுபொது

நுவரெலியாவில் அதிபர், ஆசிரியர் தொழிற்சங்க போராட்டம்

அதிபர் ஆசிரியர் சம்பள முரண்பாட்டை தீர்க்குமாறு கோரி இன்று
(09) பாடசாலை கற்றல் நடவடிக்கையின் பின்னர் நுவரெலியா பிரதான தபால் நிலையத்திற்கு முன்பாக அதிபர், ஆசிரியர் தொழிற்சங்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

சம்பள முரண்பாடு மற்றும் கொத்தலாவல சட்டமூலத்துக்கு எதிராகவும் சம்பள உயர்வை கேட்கவில்லை, எமது சம்பளத்தையே கேட்கிறோம், பிள்ளைகளின் கல்வியைச் சிதைக்காதே கல்வியை உறுதிப்படுத்து, அதிபர் -ஆசிரியர் சம்பள முரண்பாட்டை தீர்த்து வை, இலங்கை கல்வியை இராணுவ மயமாக்காதே, இருபத்து நான்கு வருட அதிபர் ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கு தீர்வை வழங்கு உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து இப்போராட் டம் இடம்பெற்றது.

நுவரெலியா தபால் நிலையத்துக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட பேரணி லோசன் வீதி ஊடாகச் சென்று மீண்டும் நுவரெலியா பொது பேருந்து தரிப்பிடத்தை வந்தடைந்தது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 6 = 1

Back to top button
error: