crossorigin="anonymous">
உள்நாடுபொது

சிறுவன் செலுத்திய சொகுசு கார் வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்து

கொழும்பு – நீர்கொழும்பு பிரதான வீதியில் வெலிசர, பொது மயானத்துக்கு அருகில் 16 வயதுச் சிறுவன் செலுத்திய சொகுசு கார் வேகக் கட்டுப்பாட்டை இழந்து 4 வாகனங்களை மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.

சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் யணித்த ஒருவர் உயிரிழந்துள்ள அதேவேளை, அவருடன் பயணித்த மற்றுமொருவர் பலத்த காயமடைந்த நிலையில் ராகம போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பிலிருந்து நீர்கொழும்பு திசையாகப் இன்று (04) பயணித்த அதிசொகுசு கார் ஒன்று, வீதியை விட்டு விலகி, எதிர் திசையில் பயணித்த இரு உந்துருளிகளையும், முச்சக்கரவண்டியொன்றையும் கார் ஒன்றையும் மோதி குடைசாந்தது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 62 − 58 =

Back to top button
error: