crossorigin="anonymous">
உள்நாடுபொது

இலங்கையின் பல பாகங்களிலும் சீரற்ற காலநிலை

இலங்கைக்கு அருகில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக நாட்டின் பல பாகங்களிலும் சீரற்ற காலநிலை நிலவுகின்றது.

பொதுமக்களின் இயல்பு நிலை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் 5 மாகாணங்களில்;, 6 மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

6 மாவட்டங்களில் ஆயிரத்து 273 குடும்பங்களைச் சேர்ந்த 5 ஆயிரத்து 119 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடும் மழை காரணமாக பதுளை மாவட்டத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தில் மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் நேற்று (31) மாலை தெரிவித்தது.

இரண்டு வீடுகள் சேதமடைந்துள்ளதுடன், 334 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.நாளைய தினமும் நாட்டின் பல பகுதிகளில் கடும் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 16 = 21

Back to top button
error: