crossorigin="anonymous">
உள்நாடுபொது

முல்லைத்தீவு பொது வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சை பிரிவு திறந்து வைப்பு

இலங்கையின் மாவட்ட வைத்தியசாலைகளில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவு இல்லாது இயங்கிவருகின்ற ஒரே ஒரு வைத்தியசாலையாக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை இதுவரை காணப்பட்டுள்ளது.

இந் நிலையில் நீண்ட காலத் தேவையை பூர்த்தி செய்யும் முகமாக பல்வேறு கொடையாளர்களின் 40 மில்லியன் ரூபா நிதி உதவியுடன் அமைக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவு நேற்று முன்தினம் (29) மாவட்ட மக்களுக்காக உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளர் க.வாசுதேவா அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவு கட்டிடத்தை இலங்கை உணர் அழியியல் சங்கத் தலைவர் பேராசிரியர் மாகொழுகம அவர்கள் நாடாவை வெட்டி திறந்து வைத்தார்.

நிகழ்வில் இலங்கை உணர் அழியியல் சங்கத் தலைவர் பேராசிரியர் மாகொழுகம, மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் மு.உமாசங்கர், அரச மருத்துவ சங்க பிரதிநிதிகள் மற்றும் மாவட்ட வைத்தியசாலையின் வைத்தியர்கள், அபிவிருத்தி சங்க பிரதிநிதிகள், நோயாளர் நலன்புரிச் சங்கத்தினர், தாதிய உத்தியோகத்தர்கள் மற்றும் சிற்றூழியர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 19 + = 24

Back to top button
error: