crossorigin="anonymous">
உள்நாடுபொது

நீர்கொழும்பு கடற்கரைக்கு அடித்துச் செல்லப்பட்ட பொருட்களை எடுத்துச் சென்றவர்கள் தொடர்பில் விசாரணை

இலங்கை கொழும்பு துறைமுகத்தின் வடமேற்கு கடல் பிரதேசத்தில் தீப் பற்றிய எக்ஸ்பிரஸ் பேர்ள் என்ற கப்பலில் தற்போது தீ எரிவதைக் காணக்கூடியதாக இல்லை என்று கடற்படை தெரிவித்துள்ளது.

தற்போது அங்கு புகை மண்டலத்தை மாத்திரமே காணக்கூடியதாக உள்ளது. இதேவேளை தீயையடுத்து கப்பலில் இருந்து கடலில் வீழ்ந்த பொருட்கள் சில நீர்கொழும்பு கடற்கரைவரை அடித்துச்செல்லப்பட்டுள்ளன.

 

நீர்கொழும்பு கடற்கரை வரை அடித்துச்செல்லப்பட்ட பொருட்களை எடுத்துச்சென்றவர்கள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் சந்தேகத்தின் பேரில் 8 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ் அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 29 = 37

Back to top button
error: