crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

முள்ளியவளை வித்தியானந்த கல்லூரி பழைய மாணவர்களால் பசுமை செயற்திட்டம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை வித்தியானந்தக் கல்லூரியில் 1992/1995 ம் ஆண்டிற்குரிய பாடசாலை பழைய மாணவர்களான க.பொ.த சாதாரண தர, உயர்தர மாணவர் அணியினரின் அனுசரனையில் நேற்று (16) சனிக்கிழமை பாடசாலை வளாகத்தை பசுமைப்படுத்தும் செயற்திட்டத்தின் கீழ் மரம் நாட்டும் விழா கல்லூரியின் உப அதிபர் சுதாகரன் அவர்களின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இவ் விழாவில் ஓய்வுபெற்ற ஆசிரியர் சோதிநாதன், உதவி கல்வி பணிப்பாளர் சிவனருள்ராஜா மற்றும் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், பாடசாலையின் பழைய மாணவர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் மற்றும் நலன்விரும்பிகள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது மரங்களை நாட்டிவைக்கப்பட்டதுடன், கலந்து கொண்டவர்களால் அபிவிருத்தி சார்ந்த கருத்துரைகளும் இடம்பெற்றுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 78 = 87

Back to top button
error: