crossorigin="anonymous">
உள்நாடுபொது

மேல் மாகாணத்தில் வாகன வருமான வரி அனுமதி பத்திரம் வழங்குவது இடைநிறுத்தம்

இலங்கையில் வாகன வருமான வரி அனுமதிப்பத்திரங்களை வெளியிடும் கணினி கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மேல் மாகாணத்தில் வாகன வருமான வரி அனுமதி பத்திரங்களை வழங்கும் நடவடிக்கை இன்று (13) முதல் இரண்டு வார காலத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளது.

மக்களுக்கு அசெளகரியம் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் கணினி கட்டமைப்பை வழமை நிலைக்கு கொண்டு வரும் வரை தற்காலிகமாக மேல் மாகாணத்தில் வாகன அனுமதி பத்திரங்களை வழங்கும் நடவடிக்கை இன்று முதல் எதிர்வரும் 26ஆம் திகதி வரை இடை நிறுத்தப் படும்.

நேற்று முதல் காலாவதியாகும் வாகன அனுமதிப் பத்திரங்களை வழங்கும் நடவடிக்கையும், டிசம்பர் மாதம் 31ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் பெறவேண்டிய அனுமதி பத்திரங்களும் இம்மாதம் 27 ஆம் திகதி முதல் பல இடங்களில் வழங்கப்படும்.

மேல் மாகாண மோட்டார் வாகன திணைக்களம், களுத்துறை கம்பஹா மற்றும் கொழும்பு மாவட்டங்களின் பிரதேச செயலகங்கள் ஆகிய இடங்களில் இந்த நடவடிக்கை இடம்பெறும் என மேல் மாகாண ஆளுநர் அலுவலகம் அறிவித்துள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 62 + = 66

Back to top button
error: