crossorigin="anonymous">
உள்நாடுபொது

‘வைத்தியசாலைக்கு அழைத்து வரப்படும் கொரோனா தொற்றாளர்கள் 15 – 30 நிமிடங்களுக்குள் அனுமதிக்கப்பட வேண்டும்’

'வைத்தியசாலைகளில் நோயாளிகளை தரையில் படுக்க வைக்க வேண்டாம்'

நாட்டில் வைத்தியசாலைகளுக்கு அழைத்து வரப்படுகின்ற கொரோனா தொற்றாளர்கள் 15 – 30 நிமிடங்களுக்குள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட வேண்டும் என சுற்றுநிருபமொன்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளர்களை அனுமதிப்பதற்கு வைத்தியசாலைகள் தாமதிப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன் பலர் முறைப்பாடுகளைச் செய்திருந்தனர். இந்த முறைப்பாடுகளை கருத்திற்கொண்டே சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் குறித்த சுற்றுநிறுபம் வெளியிடப்பட்டுள்ளது.

பாணந்துறை வைத்தியசாலையில் கொவிட் நோயாளர்களை வைத்தியசாலை வாட்டுக்களில் தரையில் வைக்கப்பட்டிருந்தது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வைத்தியசாலை பொறுப்பதிகாரிகளிடமிருந்து அறிக்கையொன்று கோறப்பட்டிருந்தது.

வைத்தியசாலைகளில் இடம் இல்லாவிட்டால் எந்தவொரு நோயாளிகளையும் தரையில் படுக்க வைக்க அனுமதிக்க வேண்டாம் என்றும், அவர்களை அருகிலுள்ள வைத்தியசாலைகளுக்கு மாற்ற நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் வைத்தியசாலை பொறுப்பாளர்களுக்கு, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இதற்கு முன்னர் அறிவுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 8 = 1

Back to top button
error: