crossorigin="anonymous">
உள்நாடுபொது

மட்டக்களப்பு – வாகரையில் யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு

மட்டக்களப்பு – வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் வெள்ளாமைச்சேனை பிரதேசத்தில் நேற்று (29) புதன்கிழமை அதிகாலை யானை தாக்கியதில் விவசாயி ஒருவர் உயிர் இழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

பெரும்போக வேளாண்மை செய்கைக்கு தனது வயலை தயார் படுத்தும் நிலையில் வயலில் தங்கி வேலை செய்து வந்த நிலையில் நேற்று அதிகாலை வயல் பிரதேசத்திற்கு வந்த யானை குறித்த நபர் தங்கியிருந்த வாடியை சேதப்படுத்தியதுடன் விவசாயியையும் தாக்கியதில் குறித்த விவசாயி உயிர் இழந்துள்ளார்.

யானை தாக்கியதில் உயிர் இழந்தவர் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் மீராவோடை பாடசாலை வீதியை சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையானவர் (வயது 54) என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மரணம் தொடர்பான விசாரனைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 13 − = 12

Back to top button
error: