crossorigin="anonymous">
உள்நாடுபொது

இலங்கையில் நடைமுறையிலுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு ஒக்டோபர் 01 முதல் நீக்கம்

இலங்கையில் கடந்த ஓகஸ்ட் 20 ஆம் திகதி முதல் நடைமுறையில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை எதிர்வரும் ஒக்டோபர் 01 ஆம் திகதி அதிகாலை 4.00 மணிக்கு நீக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளதாக கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானி, இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா இன்று (29) அறிவித்துள்ளார்.

புதிய கட்டுப்பாடுகள் மற்றும் சுகாதார வழிகாட்டல்கள் விரைவாக அறிவிக்கப்படுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கொவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் ஒரு சில கட்டுப்பாடுகளை முன்னெடுக்கவுள்ளதாக, சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

கொவிட்-19 பரவலின் 3ஆம் அலையின் உக்கிரத்தை அடுத்து, கடந்த ஓகஸ்ட் 20ஆம் திகதி முதல் நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 5 = 14

Back to top button
error: