crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

லயன்ஸ் கழகத்தினால் முல்லைத்தீவு மருத்துவமனைக்கு குருதி சுத்திகரிப்பு இயந்திரம் 

முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு மோதர மட்டக்குழி லயன்ஸ் கழகத்தினால் 16 இலட்சம் ரூபா பெறுமதியான புதிய குருதி சுத்திகரிப்பு இயந்திரம் இன்று (11) வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

கனடாவில் வசிக்கும் மருத்துவர் கந்தையா விஜயலக்சுமியை விஜயகாந்தன் குடும்பத்தினரின் நிதிப் பங்களிப்பில், ரங்கநாதன் ஐயா அவர்களின் ஒழுங்குபடுத்தலில், மட்டக்குழி லயன்ஸ் கழகத்தின் ஏற்பாட்டில் குறித்த கருவி கையளிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட மருத்துவமனை வளாகத்தில் இடம்பெற்ற இந் நிகழ்வில் கலந்து கொண்ட மட்டகுழிய லயன்ஸ் கழகத்தின் தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் வடக்கின் லயன்ஸ் கழக உறுப்பினர்கள் பொன்னாடை போர்த்தி வரவேற்கப்பட்டதைக் தொடர்ந்து, குருதி சுத்திகரிப்பு இயந்திரம் மாவட்ட மருத்துவ பணிப்பாளர் அவர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டமானது சிறுநீரக நோயாளிகளை அதிகளவானவர்களாகக் கொண்டுள்ள மாவட்டமாகக் காணப்படுகிறது. இதனால் அதிகளவானவர்கள் சிறுநீரக சுத்திகரிப்பிற்காக மருத்துவமனைக்கு வருகின்றனர்.

இந்நிலையில் சிறுநீரக நோயாளர்களின் நலன்கருதி குறித்த குருதி சுத்திகரிப்பு இயந்திரம் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 5 = 5

Back to top button
error: