crossorigin="anonymous">
உள்நாடுபொது

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று மேலும் 189 மரணங்கள்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான மேலும் 189 மரணங்கள் நேற்று (04) பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் இன்று (05) தெரிவித்துள்ளது.

இலங்கையில் ஏற்கனவே 9,951 கொரோனா வைரஸ் தொற்று மரணங்கள் பதிவானதாக அறிவிக்கப்படட்ட நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 189 மரணங்களுடன், இலங்கையில் இதுவரை 10,140 கொரோனா வைரஸ் தொற்று மரணங்கள் பதிவாகியுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று மரணமடைந்த 189 பேரில், 96 பேர் ஆண்கள், 93 பேர் பெண்கள் என்பதுடன், 60 வயதுக்கு மேற்பட்டோர் 154 பேர் என்பதும், இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று மரணங்கள் 10,000 இனை கடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 2 + 1 =

Back to top button
error: