crossorigin="anonymous">
உள்நாடுபொது

முல்லைத்தீவில் கொரோனா தொற்று இறந்த உடல்களை அடக்கம் செய்ய இடம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கான இடம் ஒன்று நேற்று (02) அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து செல்லும் நிலையில் வவுனியாவில் உள்ள எரிவாயு தகனமேடை பழுதடைந்த நிலையில் காணப்படுவதால் முல்லைத்தீவு மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் மாவட்ட மருத்துவமனையின் பிரேத அறையில் தேங்கி வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் மாவட்டத்திற்கு உடலங்களை அடக்கம் செய்வதற்கான ஒரு இடம் முதற் கட்டமாக அமைய வேண்டுமென மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் அவர்களின் திட்டமிடலில் அவரது தலைமையில் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் ம.உமாமகள், கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளர் க.விஜிந்தன், பிராந்திய சுகாதார பணிமனை வைத்திய அதிகாரிகள், வன வளத்திணைக்கள அதிகாரிகள் ஆகியோர் முதற் கட்டமாக கூட்டு கள ஆய்வினை மேற்கொண்டு இடத்தினை அடையாளப்படுத்தும் நடவடிக்கையில் நேற்றய தினம் ஈடுபட்டிருந்தனர்.

அதனடிப்படையில் தண்ணீரூற்று நெடுங்கேணி வீதியில் கயட்டை காட்டிற்கு அருகில் வன வளத்திணைக்களத்திற்கு சொந்தமான காட்டுப் பகுதியில் ஆறு ஏக்கர் காணியை ஒதுக்கீடு செய்வதாகவும் முதற் கட்டமாக ஒன்றரை ஏக்கர் வன வளத்திணைக்களத்திடம் இருந்து விடுவித்து தருவதாக வன வளத்திணைக்கள அதிகாரிகள் இணக்கம் கண்டுள்ளார்கள்.

குறித்த பகுதிக்கு அருகில் மின்சார வசதி உள்ளமையினால் உடலங்களை எரிப்பதற்கு ஏற்றவகையில் மின்சார எரிவாயு தகனமேடை அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கான நிதி உதவிகளை நலன் விரும்பிகள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களிடம் இருந்து எதிர்பார்பதாகவும் தெரியவந்துள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 6 = 4

Back to top button
error: