crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

மட்டக்களப்பு திராய்மடுவில் அன்டிஜன் பரிசோதனையில் 9 பேரிற்கு தொற்று உறுதி

மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா தொற்று சடுதியாக அதிகரித்து வரும் நிலையில் இதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மட்டக்களப்பு மாவட்ட கொரோனா தடுப்பு செயலணி பல்வேறு செயற்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.

மாவட்டத்தின் பல்வேறுபட்ட இடங்களில் சுகாதாரத் துறையினரால் ரபிட் அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில்நேற்று (29) மண்முனை வடக்கு சுகாதார வைத்தியதிகாரி பிரிவிற்குட்பட்ட திராய்மடு பகுதியில் ரபிட் அன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது கற்பினித் தாய்மார்கள், ஐந்து வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 61 பேரிற்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் 09 பேர் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 73 = 80

Back to top button
error: