crossorigin="anonymous">
உள்நாடுபொது

‘தொழில் வழிகாட்டல் வாரம்’ ஒக்டோபர் 04 ஆம் திகதி தொடக்கம் 10 ஆம் திகதி வரை

மனிதவலு வேலைவாய்ப்பு திணைக்களத்தின் பிரதான செயற்பாடான தொழில் வழிகாட்டல் தொடர்பான எண்ணக்கருவினை மக்களிடையே கொண்டு செல்வதற்காக ‘தொழில் வழிகாட்டல் வாரத்தை’ ஒக்டோபர் 04 ஆம் திகதி தொடக்கம் 10 ஆம் திகதி வரை நடத்துவதற்கு மனிதவலு வேலைவாய்ப்பு திணைக்களம் தீர்மானித்துள்ளது.

அதனடிப்படையில் குறித்த தொழில் வழிகாட்டல் வாரத்தினை முன்னிட்டு இடைநிலை (தரம் 09,10,11) பாடசாலை மாணவர்களிடையே நிகழ்நிலை ( Online ) முறையினூடாகவும் மற்றும் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு சித்திரம், கவிதைஇ கட்டுரை, பேச்சு, வினாடிவினா போட்டிகளை நடத்த மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

குறித்த போட்டிகளில் கலந்து கொள்பவர்களுக்கு பரிசில்களும், சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளன. ஆகஸ்ட் 23ம் திகதி தொடக்கம் செப்டெம்பர் 12ம் திகதி வரையில் Online ஊடாக விண்ணப்பிக்க முடியும்.

மேலதிக விபரங்களுக்கு மாவட்ட செயலக மற்றும் தத்தமது பிரதேச செயலக மனித வள அபிவிருத்தி உத்தியோகத்தரை தொடர்பு கொள்ளவும்.

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக மேலதிக தகவல்களை பெற மாவட்ட செயலக மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தருடன் 077 3482423 தொலைபேசி இலக்கமூடாக தொடர்பு கொள்ள முடியும் என முல்லைத்தீவு மாவட்ட செயலக மனித வலு வேலைவாய்ப்புத் திணைக்களத்தினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 11 − = 4

Back to top button
error: