crossorigin="anonymous">
உள்நாடுபொது

இலங்கையில் பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலை அதிகரிக்க தீர்மானம்

இலங்கையில் எதிர்வரும் திங்கட்கிழமை (23) முதல் பாணின் விலையை ரூ. 5 இனால் அதிகரிக்கவுள்ளதாக, அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

ஏனைய பேக்கரி உற்பத்திகளின் விலையை ரூ. 10 இனாலும், ஒரு கிலோ கிராம் கேக்கின் விலையை ரூ. 100 இனாலும் அதிகரிக்கவுள்ளதாக, சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

எரிபொருட்களின் விலையேற்றம், பேக்கரி உற்பத்திகளுக்கான மூலப் பொருட்களின் விலையேற்றம் காரணமாக பேக்கரி பொருட்களின் உற்பத்திகளை தயாரிப்பதற்கான செலவு அதிகமாக இருப்பதால் பேக்கரி உற்பத்திகளின் பொருட்களின் விலை அதிகரிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 76 = 79

Back to top button
error: