crossorigin="anonymous">
உள்நாடுபொது

தொழிற்சங்கங்கள் இணைந்து நாட்டை முடக்கத் தீர்மானம்

இலங்கை அரசாங்கம் எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்குள் நாட்டை முடக்குவதற்கான தீர்மானத்தை எடுக்காவிட்டால் அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்து நாட்டை முடக்குவதற்கான நடவடிக்கையை முன்னெடுக்க வுள்ளதாக தேசிய தொழிற்சங்க மையத்தின் தேசிய அமைப்பாளர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

தொழிற்சங்கங்களின் ஊடாக நாட்டை முடக்கு வதற்கான நடவடிக்கை முன்னெடுக் கப்படும் என தேசிய தொழிற்சங்க மையம் தெரிவித்துள்ளது.

அரச மற்றும் தனியார் துறை பிரிவுகளை உள்ள டக்கிய தொழிற் சங்கங்களின் பங்கேற்புடன் நேற்று (17) கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மக்களின் பாதுகாப்பு தொடர்பில் சிந்திக்காது அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது.
எனவே அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்து நாட்டை முடக்குவதற்கான நடவடிக் கையை எடுக்கவுள்ளதாக தேசிய தொழிற்சங்க மையத்தின் தேசிய அமைப்பாளர் தெரிவித்துள்ளார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 1 = 3

Back to top button
error: