crossorigin="anonymous">
உள்நாடுபொது

இலங்கையில் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணிவரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு

இலங்கை முழுவதும் இன்று (16) இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை நாளாந்தம் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் சற்று முன்னர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் இன்று(16) இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை நாளாந்தம் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளதாக கொவிட் 19 தொற்று பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்ர சில்வா தெரிவித்துள்ளார்.

ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ள காலப்பகுதியில் அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரமே போக்குவரத்துக்கான அனுமதி வழங்கப்படும்.என்றும் ‘தனிமைப்படுத்தல் ஊரடங்கு திருத்தம் ‘தொடர்பான திருத்த ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்ப்பட்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 3 = 6

Back to top button
error: