crossorigin="anonymous">
உள்நாடுபொது

ஆட்பதிவுத் திணைக்கள சேவைகள் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம்

ஆட்பதிவுத் திணைக்களத்தின் அனைத்து பொதுமக்கள் சேவைகளும் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன.

திணைக்களத்தின் பணிபுரியும் பலர் கொவிட்19 நோய்த் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். அதன்படி நாளை (16) தொடக்கம் பிரதான அலுவலகம் மற்றும் அனைத்து மாகாண அலுவலகங்களும் மறு அறிவித்தல் வரை மூடப்படுகின்றன.

இந்த தினங்களில் தேசிய அடையாள அட்டையை பெற்றுக் கொள்வதற்காக திகதியையும் நேரத்தையும் ஒதுக்கிக் கொண்டவர்களுக்கான உரிய அடையாள அட்டை அந்தத் தினத்திலோ. அதற்கு முன்னரோ தபால் ஊடாக சுய விலாசத்திற்கு அனுப்பி வைக்கப்படும்.

மேலதிக விபரங்களை info@drp.lk என்ற இணையத்தளத்தின் ஊடாகவோ அல்லது 0115 226 126 மற்றும் 0115 226 100 என்ற தொலைபேசி இலக்கங்களின் ஊடாக தொடர்பு கொண்டு அறிந்துகொள்ள முடியும்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 73 = 76

Back to top button
error: