crossorigin="anonymous">
உள்நாடுபொது

மேல் மாகாண வாகன வருமான உத்தரவூ பத்திரம் வழங்கும் பணிகள் இடைநிறுத்தம்

மேல் மாகாணத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வாகனங்களுக்கான வருமான உத்தரவூ பத்திரங்களை வழங்கும் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.

கொவிட்-19 பரவல் நிலை காரணமாக, மேல் மாகாணத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வாகனங்களுக்கான வருமான உத்தரவூ பத்திரங்களை வழங்கும் பணிகள் இன்று (12) முதல் எதிர்வரும் ஓகஸ்ட் 31ஆம் திகதி வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் சந்திமா திஸாநாயக்க அறிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் ,

குறிப்பிட்ட காலப்பகுதியில் காலாவதியாகும் வாகனங்களுக்கான வருமான உத்தரவூ பத்திரங்களை மீண்டும பெற்றுக் கொள்ளும்போது ,செப்டெம்பர் 30ஆம் திகதி வரையில் அபராதம் அறவிடப்படமாட்டாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

http://www.motortraffic.wp.gov.lk/ என்ற இணையத்தளத்தின் மூலமாக, வாகன வருமான உத்தரவூ பத்திரங்களை பெற்றுக்கொள்ள முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 74 − 65 =

Back to top button
error: