crossorigin="anonymous">
உள்நாடுபொது

‘தம்மிக்க பாணிக்கு’ வழங்கப்பட்ட அனுமதிப் பத்திரம் இரத்து

இலங்கை ஆயுர்வேத திணைக்களம், கொரேனா வைரஸினை கட்டுப்பத்த முடியும் என கூறப்பட்ட தம்மிக்க பாணிக்கு வழங்கப்பட்ட அனுமதிப் பத்திரம் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக திணைக்களம் இன்று (11) அறிவித்தது.

“இந்த பாணிக்கு தற்காலிக அனுமதிப் பத்திரமே வழங்கப்பட்டது. எனினும் மருத்துவ பரிசோதனையில் குறித்த பாணி சித்தியடையவில்லை. இதனால் வழங்கப்பட்ட தற்காலிக அனுமத்திப் பத்தரம் தற்போது இரத்துச் செய்யப்பட்டுள்ளது” என ஆயுர்வேத ஆணையாளர் தம்மிக்க அபேயகுணவர்த்தன தெரிவித்தார்.

கொரோனா தொற்றுக்கான ஆயுர்வேத சிகிச்சை முறை தொடர்பாக இன்று (11) கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 3 = 2

Back to top button
error: