crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

ஒட்டுசுட்டானில் வங்கி பணியாளர்கள் மூவருக்கு கொரோனா தொற்று

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுடுடான் பிரதேசத்தில் உள்ள இலங்கை வங்கியின் பணியாளர்கள் மூவருக்கு கொரோனா தொற்று இனம் காணப்பட்டுள்ளதை தொடர்ந்து வங்கியின் நடவடிக்கை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

கரைதுறைப்பற்று பிரதே செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட கள்ளப்பாடு, செல்வபுரம், கணுக்கேணி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 11 பேருக்கு நேற்று (10) கொரோனா தொற்று இனம் காணப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் பிரதேசங்களில் கொரோனா தொற்றாளர்கள் பலர் சமூக மட்டங்களுடன் தொடர்பினை பேணிவருவதாகவும் இதாலேயே இந்த தொற்று ஏற்பட்டுள்ளது

தொடர்பினை பேணியவர்களை இனம் காணும் நடவடிக்கை சுகாதார பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் மக்கள் சுகாதார நடைமுறையினை பின்பற்றி அநாவசிய நடமாட்டத்தினை தவிர்த்து வீடுகளுக்குள் பாதுகாப்பாக இருக்குமாறு சுகாதார தரப்பினர் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 17 + = 19

Back to top button
error: