crossorigin="anonymous">
உள்நாடுபொது

பொது போக்குவரத்தை பயன்படுத்துபவர்களின் அலுவலக அடையாள அட்டை பரிசோதனை

பொது போக்குவரத்து சேவைகளைப் பயன்படுத்துபவர்களின் அலுவலக அடையாள அட்டைகளை பரிசோதனை செய்யும் நடைமுறை இன்று (09) முதல் ஆரம்பமாகும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

நாட்டில் நிலவும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு அத்தியவசிய தேவைகளுக்காக மாத்திரம் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துமாறு அவர் மக்களை கேட்டுக்கொண்டார்.

பயணிகளை அழைத்து செல்லும்போது பஸ்களில் ஆசனங்களின் எண்ணிக்கைக்கு அமைய பயணிகள் அழைத்து செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சன நெரிசலைக் குறைப்பதற்காக இன்று முதல் அதிக எண்ணிக்கையிலான பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம கூறினார்.

இதேவேளை, அத்தியவசிய கடமைகளுக்காக வரும் அரச மற்றும் தனியார் ஊழியர்களுக்காக மாத்திரமே புகையிரத சேவைகள் இடம்பெறுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 1 = 5

Back to top button
error: