crossorigin="anonymous">
உள்நாடுபொது

இலங்கைக்கு இந்தியா மற்றும் சிங்கப்பூரில் இருந்து ஒட்சிசனை கொண்டுவர நடவடிக்கை

இலங்கையில் கொரோனா டெல்டா வைரஸ் திரிபு வேகமாக பரவி வருவதால் எதிர்வரும் 2 வாரங்களில் இந்தியா மற்றும் சிங்கப்பூர் நாடுகளில் இருந்து ஒட்சிசனை கொண்டுவருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஒளடத ஒழுங்குறுத்தல் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன இன்று (05) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

டெல்டா திரிபு நாட்டில் வேகமாக பரவுவது தொடர்பாக இன்று நிதி அமைச்சின் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றதாகவும், நாட்டின் பொருளாதாரத்தை முன்னெடுப்பதுடன் தற்போதைய வேலைத்திட்டங்களை செயல்திறன் மிக்கதாக மேற்கொள்வது குறித்தும் கலந்துரையாடப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

அரசாங்கம் இந்த துறையில் ஈடுபட்டுள்ள விசேட நிபுணர்களின் ஆலோசனைகளைப் பெற்று, எந்த சவால்களில் இருந்தும் பின்வாங்காது முன்னோக்கி செயற்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 79 − = 78

Back to top button
error: