crossorigin="anonymous">
உள்நாடுபொது

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் பாராளுமன்றத்துக்கு வருகை

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் இன்று (04) பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்வதற்காக பாராளுமன்றத்துக்கு வருகை தந்தார்.

பாராளுமன்ற வளாகத்துக்கு இன்று மு.ப. 11.15 மணியளவில் வருகைதந்த ஜனாதிபதி அவர்களை சபை முதல்வரும் வெளிநாட்டு அமைச்சருமான தினேஷ் குணவர்தன, இராஜாங்க அமைச்சர்களான கஞ்சன விஜேசேகர மற்றும் இந்திக்க அனுருத்த ஆகியோர் வரவேற்று சபை மண்டபத்துக்குள் அழைத்து வந்தனர்.

அதனை அடுத்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களுடன் ஜனாதிபதி சபைக்கு வருகை தந்தார். சபையில் உறுப்பினர்களின் வாய்மூல விடைகான கேள்விகள் மற்றும் அதற்கான பதிலளிக்கும் சந்தர்ப்பத்தில் கலந்து கொண்ட ஜனாதிபதி நண்பகல் 12.00 மணி வரை சபையில் இருந்தார்.

சபையில் இருந்த வேளையில் ஜனாதிபதி அவர்கள் பிரதமர், சபை முதல்வர் மற்றும் ஆளும் கட்சியின் முதற்கோலாசான் ஜோன்ஸ்டன் பர்னாந்து ஆகியோருடன் உறையாடிக்கொண்டிருந்ததை காணக்கூடியதாக்க இருந்தது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 65 − = 61

Back to top button
error: