crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

முல்லைத்தீவு மாவட்ட கரைதுறைப்பற்றில் ஆதன வரி பதிவுகள் ஆரம்பம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட முல்லைத்தீவு பகுதியில் புள்ளிவிபரவியல் திணைக்களத்தினால் ஆதன வரி தொடர்பிலான பதிவு நடவடிக்கை இன்று (04) தொடக்கம் முன்னெடுக்கப்படவுள்ளதாக கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளர் க.விஜிந்தன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு நகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் உள்ள வீடுகளின் ஆதன வரி தகவல்களை பெற்றுக்கொள்வதற்காக மக்களின் வீடுகளுக்கு செல்லும் அதிகாரிகளுக்கு மக்கள் ஒத்துளைப்பினை வழங்குமாறும் தவிசாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.

கரைதுறைப்பற்று பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் முதல் முதலாக ஆதன வரி பதிவுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 75 = 82

Back to top button
error: