crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் முதலுதவி பயிற்சி கருத்தரங்கு

முல்லைத்தீவு மாவட்டத்தில் அனர்த்த பாதிப்புக்களை கட்டுப்படுத்தும் நோக்கில் இரு நாட்களைக் கொண்ட முதலுதவி பயிற்சி கருத்தரங்கு இன்று (30) மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

கருத்தரங்கினை முல்லைத்தீவு மாவட்ட செயலக அனர்த்த முகாமைத்துவ பிரிவு மற்றும் சர்வோதய அரச சார்பற்ற நிறுவனமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.

இக் கருத்தரங்கில் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஆறு பிரதேச செயலர் பிரிவுகளில் இருந்தும் கிராம சேவகர் பிரிவுகளிலிருந்து மாதிரிகளாக தெரிவு செய்யப்பட்ட முப்பது இளைஞர் மற்றும் யுவதிகள் கலந்து கொண்டனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 70 + = 80

Back to top button
error: