crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

அக்கரைப்பற்று தொலைத் தொடர்பு கோபுரம் முறிந்து வீழ்ந்தது

அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களில் இன்று (26) பலத்த காற்றுடனான மழை காரணமாக அக்கரைப்பற்று அல்-பாத்திமிய்யா வித்தியாலயத்திற்கு அண்மையில் அமையப் பெற்ற தொலைத் தொடர்பு கோபுரம் முறிந்து வீழ்ந்தாக பொலிஸார் தெரிவித்தனர்.

இத்தொலைத் தொடர்பு கோபுரம் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்னர் இப்பகுதி மக்களின் பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் அமையப் பெற்றதாகும். இக்கோபுரம் முறிந்து வீழ்ந்தமையால் சில வீடுகளுக்கு பகுதியளவில் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

மின்கம்பங்கள் மற்றும் மின் இணைப்புகள் போன்றவற்றுக்கும் மிகுந்த சேதம் ஏற்பட்டுள்ளதுடன் பிரதேசத்தில் சில மணி நேரம் மின்துண்டிப்பும் இடம்பெற்றிருந்தன.

அக்கரைப்பற்று பொலிஸார் மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 4 + 4 =

Back to top button
error: