crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

நீர் பம்பிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் அன்பளிப்பு

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இணைத்தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் சுய உற்பத்தியில் ஈடுபடும் முயற்சியாளர்களை ஊக்கப் படுத்தும் முகமாக தெரிவு செய்யப்பட்ட சுய உற்பத்தி மற்றும் விற்பனையாளர்களுக்கு நீர் பம்பிகள் மற்றும் மோட்டார் சைக்கிள் போன்றவற்றினை வழங்கி (24) வைத்திருந்தார்.

நீடித்த மீள்குடியேற்றத்திற்கான உதவித் திட்டத்தின் கீழ் இலங்கை மற்றும் ஐக்கிய நாடுகள் இணைந்த செயற்திட்டத்தின் ஊடக காவியா பெண்கள் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட கரையோரப் பாதுகாப்பிற்கான மரக் கன்றுகளை நடும் வேலைத்திட்டத்தினையும் ஆரம்பித்து வைத்திருந்தார்.

வாகரை பிரதேசத்தில் உள்ள கிருமிச்சை மற்றும் மதுரம்கேணிக்குளம் போன்ற பகுதிகளுக்கும் விஜயம் செய்து அங்குள்ள மக்களை சந்தித்து அவர்களுடைய குறைகளை கேட்டறிந்துடன் அவற்றை நிவர்த்தி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரையும் விடுத்திருந்தார்.

 

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 14 − = 5

Back to top button
error: