crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

மட்டக்களப்பில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது

மட்டக்களப்பில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பு மாவட்ட விசேட பொலிஸ் பிரிவிற்கு கிடைத்த தகவல் ஒன்றிக்கு அமைய மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி பி.எஸ்.பி பண்டார தலைமையிலான பொலிஸ் குழுவினர் மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கருவப்பங்கேணி மற்றும் குமாரபுரம் பகுதிகளில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போது கஞ்சா விற்பனை மற்றும் பாவனையில் ஈடுப்பட்டிருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட குறித்த நபர்கள் இருவரையும் நீதிமன்ற சட்ட நடவடிக்கைகளுக்காக மட்டக்களப்பு நீதவான் நீதி மன்றில் ஆஜர்படுத்த படவுள்ளதாக குற்றதடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி பி.எஸ்.பி பண்டார தெரிவித்துள்ளார்.

தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்து வரும் சட்ட விரோத போதைப் பொருள் விற்பனை மற்றும் பாவனை தொடர்பில் மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் யு.பி.ஏ.டி .கே.பி. கருணாரத்னவின் பணிப்புரையின் கீழ் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையில் மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு விசேட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 96 − 88 =

Back to top button
error: