crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினால் யாழில் சோதனை நடவடிக்கை

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரின் கட்டளைக்கு அமைவாகவும் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் வட மாகாண உதவிப்பணிப்பாளரின் வழிகாட்டலுக்கு அமைவாகவும் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் உத்தியோகத்தர்களால் இன்றைய தினம் (15) யாழ்ப்பாணத்தில் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன

யாழ்ப்பாணத்தில் யாழ், கொழும்புத்துறை, கோப்பாய், திருநெல்வேலி, கோண்டாவில் ஆகிய பிரதேசங்களில் திடீர் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.

உரம் தொடர்பான கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதுடன் வர்த்தக நிலையங்களும் பரிசோதனை செய்யப்பட்டன. அத்தோடு பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபைக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் விசாரணை செய்யப்பட்டதுடன் சட்ட விரோதமான வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்ட வர்த்தகர்கள் மீது வழக்கு த்தாக்கல் செய்யப்பட்டது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 26 + = 32

Back to top button
error: