crossorigin="anonymous">
உள்நாடுபொது

இலங்கையில் மின்சார வாகனப் பாவனையை அதிகரிக்க திடடம்

இலங்கை மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் தரவுகளுக்கமைய – 2020 ஆம் ஆண்டின் இறுதியில் பதிவு செய்யப்பட்டிருந்த மோட்டார் வாகனங்களின் எண்ணிக்கை 80 இலட்சங்களைத் தாண்டியுள்ளது.

அவற்றில் குறிப்பிடத்தக்க அளவு வாகனங்கள்  10 வருடங்களுக்கும் அதிகமான பழைய வாகனங்கள் என்பதுடன் அவ்வாறான பழைய வாகனங்கள் சரியான வகையில் பராமரிக்கப்படாமையால் நச்சு வாயுக்கள் வெளியிடப்படுவதற்குக் காரணமாக அமைந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இலங்கையின் வாயு மாசடைதலில் 60% மோட்டார் வாகனங்களால் இடம்பெறுவதாக மொரட்டுவை பல்கலைக்கழகம் மற்றும் இதர நிறுவனங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மீள்பிறப்பாக்க எரிசக்தித் திட்டங்களைத் துரிதமாக மேற்கொள்வது அரசாங்கத்தின் முன்னுரிமைப் பணியாக அமைவதால், மோட்டார் வாகனப் போக்குவரத்திற்கு மீள்பிறப்பாக்க எரிசக்தியைப் பயன்படுத்துதல் தொடர்பாகக் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அதற்கமைய, மின்சார வாகனப் பாவனையை ஊக்குவிப்பதற்காக மூலோபாயத் திட்டம் ஒன்றைத் தயாரிப்பதற்காக சுற்றாடல் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 50 + = 59

Back to top button
error: