crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

திருகோணமலை மாவட்ட செயலக வளாகத்தில் பாராம்பரிய உணவு விற்பனை நிலையம்

திருகோணமலை மாவட்ட செயலக வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்ட பாராம்பரிய உணவு விற்பனை நிலையம் இன்று (12) மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராளவினால் திறந்து வைக்கப்பட்டது.

உள்ளாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சின் 189 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் மாவட்ட செயலகத்தினால் நிர்மாணிக்கப்பட்ட இப்பாரம்பரிய உணவகத்தை திருகோணமலை மாவட்ட மகளீர் சம்மேளனம் ஏற்று நடாத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் பெண்கள் தமது தயாரிப்பு உணவுகளை விற்பனை செய்வதன் மூலம் வருமானத்தை ஈட்ட ஏதுவாக அமையும். பெண்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்தும் திட்டத்தின் ஒரு முயற்சியாக இவ்வேலைத்திட்டம் அரசாங்க அதிபரின் வழிகாட்டலின் கீழ் ஆரம்பித்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ், மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் சக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 29 + = 33

Back to top button
error: