crossorigin="anonymous">
உள்நாடுபொது

யாழ் மாவட்ட சர்வமதப் பேரவையின் ஏற்பாட்டில் கொரோனா விழிப்புணர்வு

யாழ் மாவட்ட சர்வமதப் பேரவையின் ஏற்பாட்டில் இன்று (12) கொரோனா விழிப்புணர்வு செயற்பாடு யாழ் நகரில் முன்னெடுக்கப்பட்டது.

கவனம், அபாயம், அவதானம் எனும் தொனிப்பொருளில் யாழ் மாவட்ட சர்வமதப் பேரவையினரால் கொரோனா விழிப்புணர்வு பதாதைகள் யாழ் நகரப்பகுதியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இன்றைய விழிப்புணர்வு செயற்பாடு ஆரம்ப நிகழ்வு யாழ் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்னால் இடம்பெற்றது.

நிகழ்வில் சர்வ மதத் தலைவர்கள், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர், யாழ்ப்பாண பிரதேச செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டு கொரோனா விழிப்புணர்வு செயற்பாட்டினை ஆரம்பித்து வைத்தார்கள்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 19 − 15 =

Back to top button
error: