crossorigin="anonymous">
உள்நாடுபொது

மேல் மாகாணத்தில் புகையிரத சேவைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கையில் பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்பட்டதையடுத்து புகையிரத பயணிகளின் எண்ணிக்கை நாளந்தம் அதிகரித்ததினால், புகையிரத சேவைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக புகையிரத திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் காமினி செனவிரடன தெரிவித்தார்.

இதற்கமைவாக இன்று (12) அதிகாலை 50 புகையிரத சேவைகள் இடம்பெறவுள்ளன. பிற்பகலில் மேலும் 53 புகையிரத சேவைகளை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

புதிய புகையிரத சேவை கால அட்டவனையின்படி பிரதான புகையிரத அம்பேபுஸ்ஸ, மீரிகம, வெயாங்கொட, கம்பஹா, மற்றும் ராகம ஆகிய பாதைகளின் ஊடாக 33 ரயில் சேவைகள் இடம்பெறவுள்ளன.

கரையோரபுகையிரத சேவைகளான அளுத்கம, களுத்துறை, மொரட்டுவ, பாணந்துறை மற்றும் கல்கிஸ்ஸ ஆகிய பிரதேசங்கள் ஊடாக 42 சேவைகளும் களனிவெளி புகையிரத பாதை ஊடாக அவிசாவளை, கொஸ்கம மற்றும் பாதுக்க ஆகிய பிரதேசங்களை ஊடறுத்து 13 புகையிர சேவைகளும் இடம்பெறவுள்ளன.

அத்தியாவசிய சேவைகளுக்காக மாத்திரம் வருவோரின் வசதி கருதி மாகாணங்களுக்கூடாக வரையறுக்கப்பட்ட பஸ்கள் சேவையில் இணைத்துக்கொள்ளப்படும் என்று இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 46 = 47

Back to top button
error: