crossorigin="anonymous">
உள்நாடுபொது

ஓட்டமாவடி மஜ்மா நகர் மையவாடி பயன்பாட்டுக்காக கெட்டப்பில்லர் இயந்திரம்

கண்டி மாவட்ட பள்ளிவாசல்கள் சம்மேளனம் மற்றும் கண்டி மாவட்ட கொவிட்19 பொஸிடிவ் ஜனாஸா செயலணியினரால் நேற்று (10) ஓட்டமாவடி மஜ்மா நகர் பொது மையவாடியின் பயன்பாட்டுக்காக கெட்டப்பில்லர் இயந்திரம் ஓட்டமாவடி கோறளைப்பற்று பிரதேச சபையிடம் கையளிக்கப்பட்டன.

இந்நிகழ்வில் நீதியமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, பாராளுமன்ற உறுப்பினர் ஹாபீஸ் நசீர், மர்ஜான் பலீல், இஸ்ஹாக் ரஹ்மான் அவர்கள், அக்குறணை பிரதேச சபை தவிசாளர் இஸ்திஹார் இமாதுத்தீன், ஓட்டமாவடி பிரதேச சபை தலைவர் நௌபர், உடுநுவர பிரதேச சபை பிரதி தவிசாளர் சப்வான், முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஹிதாயத் சத்தார், கண்டி மாவட்ட ஜம்மியத்துல் உலமா தலைவர் அஷ்ஷேஹ் உமர் தீன் மௌலவி, கண்டி பள்ளிவாசல்கள் சம்மேளன தலைவர் சித்திக் ஹாஜியார், கொவிட்-19 தொற்றும் தடுப்பு செயலணியின் ஜனாதிபதி இணைப்பாளர் வைத்திய கலாநிதி அன்வர் ஹம்தானி, அப்சல் ஹாஜியார், அரச உத்தியோகத்தர்கள், பிரமுகர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 23 + = 29

Back to top button
error: