crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

மட்டக்களப்பு சிறைச்சாலையில் 44 பேருக்கு கொவிட் தொற்று

மட்டக்களப்பு சிறைச்சாலையில் எழுமாற்றாக 67 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்ரிஜன் பரிசோதனையில் 44 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதாரப்பணிப்பாளர் வைத்திய கலாநிதி நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்

சிறைச்சாலையில் இருவருக்கு அறிகுறிகள் தென்பட்டதனைத் தொடர்ந்து எழுமாற்றாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளிலேயே 44 பேர் தொற்றாள்களாக இனங்கானப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

இதேவேளை தொற்றுக்குள்ளானவர்களை கொழும்பில் உள்ள சிகிச்சை நிலையத்திற்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றனஅத்துடன் கடந்த 10 மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலத்திற்குள் 55 பேருக்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள தாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 45 − = 38

Back to top button
error: