crossorigin="anonymous">
உள்நாடுவணிகம்

இலங்கை மத்திய வங்கியின் 2020 ஆம் ஆண்டறிக்கை ஒத்திவைப்பு விவாதம் இல்லை

இலங்கை மத்திய வங்கியின் 2020 ஆம் வருட ஆண்டறிக்கை தொடர்பான ஒத்திவைப்பு விவாதத்தை இன்று (09) நடத்தாமல் இருப்பதற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று (08) இடம்பெற்ற பாராளுமன்ற அலுவல்கள் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

விவாதத்தை ஆகஸ்ட் மாத முதலாவது பாராளுமன்ற அமர்வு வாரத்தில் ஒரு தினத்தில் நடாத்துவதற்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க தெரிவித்தார்.

இன்று ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டது போன்று பாராளுமன்ற உறுப்பினர்களின் வாய்மூல விடைக்கான கேள்விகளை கேட்பதற்காக பாராளுமன்ற அமர்வு இடம்பெறும்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 59 + = 67

Back to top button
error: